பக்கம்:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், முதல் பதிப்பு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது? என உலக மக்கள் கேட்பர். அக்காலத்தில் 'அவரை எங்கட்குத் தெரியாதே', 'அவர் தமிழ் நாட்டில் இருந்ததில்தில்லையே என்று, தமிழன் கூறாதிருக்க வேண்டுமானால், அவரையும் போன்று தமிழனுக்கு உழைத்து உலகுக்கு உழைத்த பெரியார்களையும் பற்றிய வரலாறுகள் தமிழகத்தை இன்றும் புறக்கணியாத தமிழராமாவது எழுதப்பட வேண்டும்.

தோழர் சி.என். அண்ணாதுரை எம். ஏ. அவர் களின் சிறு நூல் "சிந்தனை சிற்பி சிங்காரவேலர்" அவ்வறிவுலகப் பெரியாரை அத்தமிழரை யாவரும் காண ஒரு சில பக்கங்களிலேயே முன்னே கொண்டு வந்து நிறுத்திக் காட்டுகிறது. அவரை அளந்தறிவதன் மூலம் தமிழன் தன் நிலை. தன் கடமை ஆகியவற்றை அளந்தறிவானாக, அவ்வணம் அறிய அறிந்து ஆமுறை செயலாற்ற இச்சிறு நூல் உதவுவது உறுதி.

தமிழ்மனை,
திருவல்லிக்கேணி.

கா. அப்பாதுரை
எம்.ஏ. எல். டி., வீசாரத்