இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தண்
- வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வுகளின் நோக்கமும், பரப்பும் மிகப் பெரியதாக இருக்கும்போது, அவற்றில் பங்கேற்றுக் கொள்ளும் மக்களின் எண்ணிக்கையும் அதே போன்று மிகப் பெரியதாகவே இருக்கும். வி.இ.இலெனின்
- மனிதனின் வரலாறு படைக்கும் நடவடிக்கை அகன்றும், ஆழமாக வும் வளரும்போது, அந்த வரலாற்றைப் படைக்கும் மக்கள்
வெள்ளத்தின் அளவும் அதிகரிக்கவே செய்யும்.
வி.இ.இலெனின்
- குடியாட்சியை முழுமையாகப் பின்பற்றாத சமன்மையம் வெற்றி பெற்றதாக இருக்க முடியாது. வி.இ.இலெனின்
- உழைக்கும் மக்கள் குடியாட்சிமுலமன்றிவெற்றிபெற்றவர்களாக இருக்க இயலாது. அதாவது குடியாட்சிக்கு முழுமையான பயன் அளித்து, அதனுடைய போராட்டத்தின் ஒவ்வொரு நிலையுட னும் உறுதிநிறைந்த சொற்களினால் உருவாக்கப்பட்ட மக்களாட்சி கோரிக்கைகளை இணைக்கச் செய்தல் வேண்டும்.
வி.இ.இலெனின்
- நாட்டுச் சட்டங்கள் பற்றிய கலந்துரையாடலில் பங்கேற்கும், தனது முகவாண்மையைத் தேர்ந்தெருக்கும் உரிமையுடன், நாட்டுச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் ஒரு சூழ்நிலையில் ஒவ்வொரு குடிமகனும் வைக்கப்பட வேண்டும்.
வி.இ.இலெனின்
- மக்களின் வாழ்வுரிமைக்காகப் போராரும் எவர் ஒருவரும், நாட்டு மக்களின் தனி ஆள் உரிமைக்காகவும் மேன்மைக்காகவும் போராட வில்லையெனில், அவர்களது போராட்டம் ஒன்று தொடர்ச்சி
யற்று இருக்கும் அல்லது உண்மையற்றதாக இருக்கும்.
வி.இ.இலெனின்
- விளையாட்டல்லாத தீவிரமான அரசியல், எளிய மக்கள் வெள்ளத் தினால் மட்டுமே உருவாக்கப்பட இயலும், வி.இ.இலெனின்
30