இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்
- கவிதை என்பதும் சளசள எனப் பேசுவதும் மாறுபட்ட இரு துருவங் களில் உள்ளவையாகும். கவிதையின் சாரம் சுருங்க உரைக்கப் பட்ட பொருளில் இருப்பதாகும்; அதனை நீர்த்துப் போகச்செய்வது
என்பது அதனைக் கொல்வதே ஆகும்.
நிகலாய் செர்னிசேவ்ஸ்கி
- சொற்களை நாணயம் போல் அச்சிரும்.
கடினமானதாகவும், தெளிவானதாகவும், உண்மையானதாகவும் இவ்விதியை எப்போதுமே மீறாதே. சொற்கள் சிலவாக இருக்கும்போதும் சிந்தனைகள் பலவாக இருக்கட்டும். நிகலாய் நெக்ரசோ
- கவிஞனின் பெருமை ஒளிவிரும் ஒலியழகில் உள்ளது.
ஆனால் ஒலியழகு ஆழமற்ற சொல்லினை வெறுக்கிறது.
சுலைமாண் ஸ்டால்ஸ்கி
- குறிப்பாகப் பாடல்கள் எழுதுவதில்,புதுமையானதென்பது தோன்றி யவுடன் விரைவில் மறைந்துவிடுவதாகும். ஏ.என்.ராடிஉ;சேவ்
- ஒர் உண்மையான கவிஞனை உருவாக்கும் இன்றியமையாத குணங்களில், புதுமை என்பதும் உறுதியாக இடம் பெற்றிருக்க வேண்டும். வேறு எவர் ஒருவரையும்விட, கவிஞன் என்பவன்
தனது காலத்திய ஒரு மகனாக இருக்க வேண்டும்.
விசாரியோன் பெலின்ஸ்கி
- கவிதையின் மொழி என்பது, துல்லியமானதாகவும், சுருக்க மானதாகவும், தெளிவாகக் காட்சியளிப்பதாகவும், இசைத் தண்மை கொண்டதாகவும் இருப்பதாகும். விளாடிமிர் கோரோலெங்கோ