பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

தவத்திரு அடிகளார்



1309. “ஒவ்வொரு இந்தியனும் மதச் சார்பற்ற தன்மையுடையவனாய் இருந்தாலே மதச் சார்பற்ற நாடு.”

1310. “பொறுப்புணர்ந்த நிலை, வாழ்க்கையை இயக்கமாக்கி விடும்.”

1311. “வாழ்க்கையில் உள்ள சோம்பலே பொறுப்பின்மைக்குக் காரணம்.”

1312. “இன்தென வேலை தெரிந்திருந்தும் அதைச் செய்யாது சுற்றுவது அலையும் மனத்தின் அடையாளம்.”

1313. “இறை வழிபாடு மட்டுமே வாழ்க்கை என்றால் மானுடப் பிறப்பை இறைவன் செய்திருக்க வேண்டியதில்லை.”

1314. “அரசின் திட்டங்களை அறிந்து கொள்ளுதலே ஆக்கத்தின் முதற்படி.”

1315. “செலவுகளில் முதற் செலவு சேமித்தல்”

1316. “கொடிய துன்பங்களையும்கூட மகிழ்வாக அனுபவிக்கலாம்-வாழ்க்கையில் வளரவேண்டும் என்ற உணர்விருந்தால்.”

1317. “சமுதாய அமைப்பின் சிற்பி ஆசிரியரே.”

1318. “ஒவ்வொருவருக்கும் ஒரே ஒரு உபாசனா மூர்த்திதான் இருக்கவேண்டும். எந்தத் திருவுருவத் தினைக் கண்டாலும் தனது உபாசனா மூர்த்தியின் வண்ணமாக நினைப்பதே மரபு.”

1319. “மனசாட்சி” என்ற சொல், மனத்துக்குச் சாட்சியாக இருக்கும் கடவுளையே குறிக்கும்.”

1320. “நாம் முற்றாகப் பொறுப்பேற்க இயலாத நிலையில், சத்தியம் செய்வது கூடாது.”