பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

147



1434. “கசப்புணர்ச்சியை வளர்த்தல் எளிது; அகற்றுதல் அரிது.”

1435. “இந்திய சமூக வாழ்க்கையில் வேரூன்றிய பிரிவினை எண்ணங்களை எளிதில் அகற்ற முடிய வில்லையே!”

1436. “நியாயமான ஒன்றை அடைய எளிய முயற்சிகளே போதும்!”

1437. “பிறர் பற்றி உன்னிடம் குறை சொல்பவர்கள் நிச்சயம் உன்னைப் பற்றியும் கூறுவார்கள். விழிப்பாக இரு.”

1438. “நற்பழக்கங்கள் மூலம் தான் தீயபழக்கங்களை அகற்ற முடியும்.”

1439. “வாழ்க்கை, களிப்புக்காக ஏற்பட்டதன்று களிப்பு, வாழ்க்கையில் ஒரு பகுதி.”

1440. “மற்றவர் கவலையை அறிந்து மாற்ற முயலுபவர்களின் கவலை தானே மறையும்.”

1441. “சம வாய்ப்புகள் இயற்கையாக அமையத்தக்க வகையில் சமுதாய நடைமுறை அமைந்தாலே நாடு வளரும்.”

1442. “பாவிகளையும்கூட நேசித்து கட்டுப் பாட்டிற்குள் வைத்துக் கொள்ளல் புண்ணியம் செய்தற்கு உதவியாக இருக்கும்.”

1443. “ஒவ்வொருவ்ரும் அவர்களால் முடிந்த எல்லை வரையில் தனி நடைப்போக்கு. இயலாத எல்லையில் சமுதாயத்தை நாடுவர்.”

1444. “அற்ப மனிதர்கள்தான்” பெரிய மனிதர்களாகிக் கொண்டு வருகின்றனர்.”