பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
iv


இந்த வைர வரிகள் இந்து சமயத்தில் சாதியத்தின் ஆதிக்கத்தை பறை சாற்றுகின்றது. இதற்குரிய தீர்வும் சொல்லப்படுகிறது.

திருவள்ளுவரையும், வள்ளலாரையும் பின்பற்றாததால்தான், நம் நிலை தாழ்ந்தது, என்று அருள்நெறித் தந்தை அருமையாகக் கூறுகின்றார்கள்.

அருள் நெறித் தந்தையின் பாதை, மானுடத்தை தேவநிலைக்கு உயர்த்த வழிகாட்டும் பாதை.

எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிறை என்ற நிலையை இந்தியா உலகிற்கு அளிக்கும் என்ற ஆன்மீகப் பாதை.

சிறந்த ஆன்மீகப் பாதையில் பயணம் தொடர தமிழ் கூறும் நல்லுலகில் தாரகமந்திரமாய் அருள் நெறித் தந்தையின் அமுத மொழிகள் பயன்படும்.

இந்த அமுதமொழிகளைத் தொகுத்துத் தந்த நம் ஆதீனப்புலவர் திருமிகு மரு. பரமகுரு அவர்களுக்குப் பாராட்டுக்கள், நல்வாழ்த்துக்கள்.

அருள்நெறித்தந்தை, தமிழ்மாமுனிவர் குருமகா சந்நிதானத்தின் பொன்மொழிகளை அச்சில் கொண்டுவரும் அருமை கலைவாணி பதிப்பகக் கவிஞர் சீனி திருநாவுக்கரசு அவர்களுக்கு நெஞ்சு நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

குன்றக்குடி

என்றும் வேண்டும் இன்ப அன்பு,

11-7-97

பொன்னம்பல அடிகளார்.