பக்கம்:சிந்தனை மேடை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33; டைய மனத்தைத் துன்புறுத்தும் என்று தெரிந்திருந்தும் அதை இந்தப் பத்துப் பேரும் கண்டு குமுறுவதற்குச் சந்தர்ப் பம் ஏற்படுத்திக் கொள்கிறவனை என்னவென்று சொல்வது? மனிதன் தனியாக வாழவில்லை. சமூகத்தில் ஒருவளுகக் கலந்து வாழும் பொது வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக் கும் சுற்றுப்புற உணர்ச்சி அவசியம் வேண்டும். தனி மனிதனு. டைய சுகதுக்கங்களுக்கும் அவற்றின் காரணங்களுக்கும் அவனே பொறுப்பாளி ஆலுைம் அந்தச் சுகதுக்கங்கள் சமூ: கத்தோடு தொடர்புள்ளவைகளாகவே இருக்கின்றன. பல பேருக்குத் தெரியும்படியான ஒருவனுடைய செல்வமும், சுக. மும், சமூகத்தின் கவனத்துக்கும், கணிப்புக்கும் ஒவ்வொரு விநாடியும் இலக்காகிக் கொண்டிருக்கின்றன. அதே போல் பல பேருக்குத் தெரியும்படியான ஒருவனுடைய துக்கமும், வேதனைகளும். பழியும் பழக்க வழக்கங்களும்கூடச் சமூகத் தின் கவனத்துக்கும், கணிப்புக்கும் ஒவ்வொரு விநாடியும் இலக்காகிக் கொண்டிருக்கின்றன. இதை நி ைவு வைத்துக் கொண்டு வாழ்வதுதான் சுற்றுப்புற உணர்ச்சி. எட்டு மாடிக் கட்டடம் உள்ள பெரிய ஒட்டலில் ஏர்க் கண்டிஷன்' செய்யப் பெற்ற ஹாலில் அமர்ந்து வயிறு புடைக்கச் சாப்பிட்டு விட்டு நீங்கள் படி யிறங்கித் தெருவில் பிரவேசிக்கும்போது எதிர்ப் பக்கத்து மரத்தடியிலே குழிந்த வயிறும் பஞ்சடைந்த கண்களுமாகப் பசியின பிரதிநிதிகளாய் வீற்றிருக்கும் பத்துப் பிச்சைக்காரர் களைப் பார்த்தால் உங்கள் உடம்பும் மனமும் கூனிக் குறுகிக் கூசுவது உண்டா, இல்லையா? நீங்கள் வயிறு நிறையச் சாப் பிட்டு விட்டு வந்ததை எண்ணி உங்களுக்கே அருவருப்பு உண்டாகுமா இல்லையா? இப்படிப் பிறருடைய துக்கங்களை உணரும் போது தன் சுகத்தை எண்ணிக் கூசுவதும் சுற்றுப் புற உணர்ச்சிதான். உயர்ந்த பண்பாடுகளுடன் வாழ்கிற சிறந்த சமுதாயத்துக்கு இந்தக் கூச்சமும் ஒர் அடையாள மாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/35&oldid=825911" இலிருந்து மீள்விக்கப்பட்டது