பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 & சிந்தாநதி which is all I have got În this my life. ★ 女 食 மாலை அந்தியாக மாறிக்கொண்டே வருகிறது. என்னை வீட்டுக்குக் காவல் வைத்துவிட்டு, எப்பவோ எல்லோரும் கொலுப் பார்க்க, கொலுவுக்கு அழைக்கப் போய்விட்டனர். கூடத்தில் உட்கார்ந்தபடி, கொலுவுக்கு எதிரேஎனக்கு அம்மாவின் நினைப்பு வந்துவிட்டது. அம்மா எப்படிப் பாடுவாள்! இந்நாளில் கொலுவுக்குப் யார் பாடுகிறார்கள் : டேப்தான் இருக்கிறதே! அம்மாவின் குரல் புல்லாங்குழல் போன்றது. ஒரு திகட்டலான இனிமை. ஒரு பக்கம் வெள்ளிச் சிறகு, மறு பக்கம் பொன் சிறகு கூடிய ஒரு பட்சி பறப்பது போன்ற குரல். போச்சு அந்த நாள் எல்லாம் தொண்டையை அடைக் கிறது. மூக்கு உறிஞ்சிற்று. நல்ல வேளை, யாரும் இல்லை. 'கி-l-ச். கேட் திறக்கிறது. அடுத்த சில கணங்களில் வெளியிலிருளினின்று கூடத்தில் தோன்றினாள் என்றே சொல்ல வேண்டும். வாட்ட சாட்டமான உடல் வாகு. "யாரும் இல்லையா? என்று கேட்கும் சைகையில் கையை ஆட்டினாள். உருண்டை முகம், மேட்டு நெற்றி. "யாரும் இல்லை என்ற பதிலில், என் மெளன விரதத்தில் கை விரித்தேன்.