இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
லா. ச. ராமாமிருதம் * 91 இத்தனை வருடங்களின் பின்னோக்கில் எனக்கு இன்னும் வேறு ஏதேதோ உண்மைகள் புலப்படுகிறாப் போல் ஒரு உணர்வு. ஏதோ ஒரு வகையில், இவர்கள் எழுத்துக்குத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட பிக்குகள். இந்த ஏழெட்டுப் பேரில் நாலுபேர் இப்போது நம்முடன் இல்லை. இவர்களில் மூவரேனும் எழுத்துக்கே பலியானவர்கள். அந்த மஹாராஜியைப் பற்றி எனக்குக் கொஞ்சம் தெரியும். அவள் மோஹினி. மிக்க அழகி. இரக்கமற்றவள். Medusa “வா, வா. என்னைப் பார் என் அழகைப் பார்!” அவன் நெஞ்சை நீட்டுகிறாள். உள் உள்ளேய பாடுகிறாள். கொல் இசை, சிந்தா நதி மேல் கவிந்த ஒரு பனிப் படலம்.