இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
188
'கண்ணகன் ஞால மெல்லாங் களிப்புறு மரிய காட்சி
யண்ணறன் மணத்தின் கோல மாமினா வென்னு மந்தப்
பெண்ணிருந் தினிது காணப் பெற்றிலள் காணு மென்பர்."
ஆம்! நீர்மையுடையார் நெஞ்சத்தில் நினைவாகிவிட்டார் அன்னை ஆமினா, அன்பே உருவாய் துன்பமே துணையாய் வறுமையே வழிகாட்டியாய்க் கொண்டு-மக்கள் துணையின்றி மலக்குகள் துணையாலே வாழ்ந்து மறைந்த ஆமினா நிலத்திலும் எண்மடங்கு பொறுமையுடையவர் என்பது வெள்ளிடை மலையாய் விளங்குகின்றது.
அலிமா
- பெருமானார் (சல்) அவர்களின் வளர்ப்புத்தாய்
- -செவிலித் தாய் அலிமா
- அலிமாவையும் அழகுப் பாவையாகவே
- சித்திரிக்கிறார் உமறுப்புலவர்,
- அலிமாவின் தோற்றப் பொலிவினை,
- ஆயிழை யெனுமலி மா 6:28
- இலங்கிழை யலிமா 7:10:7
- செகமகி ழலிமா வென்னுந் திருந்திழை 7, 24
- காரிகை யலிமா 7:37
என்றும்,
- அவருடைய குழலழகினை,
- மன்ற லங்குழ லாள லி மாவெனு மடந்தை 6:5
- அவ்வலங் குழலலிமா 6:36
என்றும்,
- அவளுடைய வடிவத்தினை,
- புதிய நல்வடி வாகிய பூங்கொடி யலிமா 6 : 49
- ↑ 1. சீறா. மணம்புரி படலம் 57