சின்னஞ் சிறு பெண்
"அவள் சின்னஞ் சிறு பெண் தான், அந்நியனே!"
இவ் வார்த்தைகளை நான் நினைத்துப் பார்க்கிற போதெல்லாம், வயதாகிச் சோர்ந்து போன இரண்டு ஜோடிக் கண்கள் ஆண்டுகள் பலவற்றையும் கடந்து என்னை நோக்கிச் சிரிக்கின்றன; அன்பும் இரக்கமும் நிறைந்த மென்மையான இனிய புன்சிரிப்புச் சிரிக்கின்றன. கரகரக்கும் இரு குரல்கள் ஒரே தன்மையான தொனியுடன் “சின்னஞ் சிறு பெண்தான்” என்று என் மனசில் பதியும் படி பேசுவதையும் நான் கேட்கிறேன்.
இந்த நினைவுச் சித்திரத்தினால் நான் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் பெறுகிறேன். எனது தாயகத்தின்-மிகுந்த பரப்பும் துயரமும் பெற்றுள்ள பூமியின் - வளைந்து நெளியும் ரஸ்தாக்களில் நான் நாடோடியாக அலைந்த பத்து மாத காலத்தின் நினைவுகளில் எல்லாம் மிகவும் சிறந்தது அது தான்.
ஸாடன்ஸ்க் எனும் இடத்திலிருந்து வோரோனெஷ் என்கிற ஊருக்குச் செல்லும் பாதையில் இரண்டு யாத்ரிகர்களை நான் கடந்து செல்ல நேர்ந்தது. கிழவன் ஒருவன்;