பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு | 103 ஆண்டவன் ஒருவனே என் அரசன் - அவனது அன்பே கருணையே என் சட்டம்! நீண்ட பிணைப்புகளில் விடுபட்டேன்! - எனது நெஞ்சின் சாட்சிக்கே கடன்பட்டேன்! துதியும் முகமனும் எனைக் கவரா! - பெரும் சூதும் வாதும் எனையணுகா! நிதியும் பரிசும் நான் வேண்டேன் - இறையை நினைந்து தொழுதலே என்தொழிலாம்! நன்னெறி நூல்களே என் துணையாம் - அருளை நாடும் எவனும் என் தோழன்! இன்னல் என்பது துளியுமின்றி - நாளும் இன்பம் பொங்கவே வாழுகிறேன்!