பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'புலி போலப் பாய்ந்தான் என்னும் போது பொருள் அழுத்தம் பெறுகிறது. உவமையைப் பொருத்தமுறக் கூறுவதில் அழ. வள்ளியப்பா தனித்த திறம் காட்டுகிறார். கொக்கின் மூக்கிற்கு ஈட்டியையும், அன்னத்தின் நிறத்திற்கு பாலையும் உவமையாக்குகிறார். எட்டு மாடிக் கட்டடத்தின் மேலே நின்று கீழே சாலையைப் பார்க்கும்போது அது தலையில் வகிடு எடுத்தமைபோல் இருப்பதாகக் கூறுகிறார். தட்டில் இருந்த சோளப் பொரியை விட்டு எறிந்த தார்?-பின் நட்ட நடுவே அந்த வெள்ளித் தட்டை வைத்தது யார்? என உடுக்களைச் சிதறிக்கிடக்கும் சோளப் பொரியாகவும் நிலவை அவற்றினிடையே கிடக்கும் வெள்ளித் தட்டாகவும் சுட்டிக் குழந்தைகட்கு உருவகத்தையும் அறிமுகப்படுத்தி விடுகிறார். குழந்தைகள் அறிந்தும் உணர்ந்துமுள்ளவற்றையே கவிஞர் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. நயமிகு நகைச்சுவையாளர் அனைவர்க்குமே நகைச்சுவை இனிமை பயப்பது. குழந்தைகட்கோ அது கொள்ளை இன்பம் தருவது. அழ. வள்ளியப்பா அவர்கள் வேடிக்கைப் பாடல்கள் என்றும், நகைச்சுவைப் பாக்கள் என்றும் பல கவிதைகள் புனைந்துள்ளார். xiii