பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பாரதத்தாய் நலமுடனே வாழ்க! வாழ்க! பாரதியார் புகழ்வாழ்க! வாழ்க!" என்றே குழந்தைகளும் பெரியோரும் கூடி ஒன்றாய்க் குரல்எழுப்பி, உணர்ச்சியுடன் முழங்கும் போது, “பாரதத்தாய் நலமுடனே வாழ்க! வாழ்க! பாரதியார் புகழ்என்றும் வாழ்க! வாழ்க!” எனஅந்தச் சேவகரும் உணர்ச்சி யோடே எங்களுடன் வாய்விட்டுப் பாட லானார். 'இந்தியரே நாமும் என அந்த நேரம் எண்ணியதால் தமைமறந்து பாடி னாரே! 128