பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கோமதிக்கு வீடு உண்டு
கோடம் பாக்கத்திலே.

குமரனுக்கு வீடு உண்டு
குரோம் பேட்டையிலே.

மீனாவுக்கு வீடு உண்டு
மீனம் பாக்கத்திலே.

செளந்தருக்கு வீடு உண்டு
சைதாப் பேட்டையிலே.

இவர்கள் வீடு செல்லவே
ஏறுஎறு ரயிலிலே.

புகைவி டாத ரயிலிலே
போகலாமே விரைவிலே!

42