பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்




மருத்துவர் சென்றபின், கத்தியை எடுத்துக் கொண்டு நோயாளியின் மகன் வெளியில் சென்றான். கோடைக்காலமானதால் வாசலின் வெளியே ஒரு மனிதன் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான். அந்த மனிதனின் தொடையிலிருந்து ஒரு துண்டு தசையினை வெட்டியெடுத்தான்.

பயந்து எழுந்த அந்த மனிதன் வேதனையில் கதறினான். கதறிய அந்த மனிதனைப் பார்த்து, அழாதே என்று தன் கைகளை அசைத்துச் செய்கை செய்து காண்பித்தான். பின்னர் அவன் சொன்னான், “உனது தசை சாகப்போகிற ஒரு தந்தையின் உயிரைக் காக்கப்போகிறது. ஒரு தந்தைக்கு மகன் செய்ய வேண்டிய கடமையின் இன்றியமையாமையை நீ அறிய மாட்டாயா?” என்று.


53. வேதனையிலிருந்து விடுபெற வழி

சீழ்க் கட்டி வளர்ந்து கால் ஒன்று புற்றுக்கழலை நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார் ஒருவர். ஒரு நாள் அவர் தன் வீட்டுச் சுவரில் துளை ஒன்றினை ஏற்படுத்தி அதன் வழியாகப் பாதிக்கப்பட்ட காலை வீட்டை விட்டு வெளியே தெருவில் நீட்டிக் கொண்டிருந்தார். “ஏன்?” இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்ட போது தன் புருவத்தை உயர்த்தி அவர் சொன்னார், “என்னால் இந்த நோயின் படும் வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த நோய் என்னை விட்டு விலகிப் போகவே இவ்வாறு காலை வெளியே நீட்டிக் கொண்டிருக்கிறேன்” என்று.