இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
8
சிறந்த சொற்பொழிவுகள்
'ஏ, தாழ்ந்த தமிழகமே! என்றெண்ணி மிகச் சோர்வடைகிறோம்.
தாய் மொழியை மறந்த மக்கள் வேறெங்காவது இருப்பதாய்ச் சொல்ல முடியுமா? காணமுடியுமா? அந்தோ, அவலம்! படித்தோர் மன உணர்வும் மான உணர்வும் அற்று வேடந்தரித்து வாழும் நிலை வேறு எங்காகிலும் உண்டா?
இத்தகைய சிந்தனைகள் தோன்றத்தான் சுரதா அவர்கள் விரும்புகிறார் போலும்.
வயது முதிர்ச்சியால் சில குறிப்புகள் வரைய முடியாமல் வருந்துகிறார். அவரது ஆர்வ உணர்ச்சிக்கு நன்றி கூறுகிறோம்.
கடந்த நூற்றாண்டில் இருந்த நிலையே இப்போதும் உள்ளதை இளைஞருலகம் உணர்ந்து, எழுச்சிகொண்டு புதியநிலையை உருவாக்க இந்நூல் துணை புரியும் என்று நம்புகிறோம்.
அன்புடன்
வெள்ளையாம்பட்டு சுந்தரம்