46 சிறந்த சொற்பொழிவுகள்
ஏற்படுமாயின் ஒற்றுமையும் சமரசமும் உண்டாகும். அன்றியும் இச்சபையோர் அனைவரும் வள்ளலார் கருத்துக்களுக்கு ஒரு சிறிதும் மாறுபடாத மனமுடையராதல் வேண்டும். தமிழ்மொழியைப் பல்லாற்றுனும் வளர்த்தல் வேண்டும், புத்தக சாலைகள் அமைத்தல் வேண்டும்; புதியனவும் பழையனவும் ஆகிய நூல்களைத் தேடி வெளியிடுதல் வேண்டும். அன்பர்காள், எழுமின்! எழுமின் !! எழுமின் !!! -
உண்மை நேயம் வாய்ந்த மெய்யன்பர்களே, இனி நம் கருத்துக்கள் அனைத்தும் எண்ணியாங்கே ஈடேறுமாறு நம் வள்ளற் பெருமானை உள்ளன்போடு வாழ்த்தி வழிபடுவோமாக.
எழுவோம் எழுவோம் அனைவரும் எழுவோம் தொழுவோம் தொழுவோம் துணைக்கரம் கூப்புவோம் அராமலி சடையேற் கன்புரு வான - இராம லிங்கன் இணையடி வாழ்த்துவோம் சமரசம் ஒங்குக சன்மார்க்கம் ஓங்குக திமிரம் நீங்கிச் செகமெலாம் ஒங்குக
வாழையடி வாழையா வந்த மரபினர் கோழை யகன்றே குலவி வாழ்க
அன்பர் வாழ்க ஆண்டான் வாழ்க இன்பம் பெருகி எல்லாம் வாழ்க
வாழ்க வடலூர் வாழ்க வளாகம் வாழ்க, வடலூர்ச் சபையும் வாழ்கவே.