மங்கல வாழ்த்துப் பாடல் 11
கண்ணகி அறிமுகம் மாகவான் நிகர்வண்கை மாநாய்கண் குலக்கொம்பர் ஈகைவான் கொடி அன்னாள் ஈள் ஆறு ஆண்டு அகவையாள் அவளும் தான் 25 போதில்ஆர் திருவினாள் புகழ் உடை வடிவு என்றும், தீது இலா வடமீனின் திறம்இவள் திறம்என்றும் மாதரார் தொழுதுரத்த வயங்கிய பெருங்குணத்துக் காதலாள் பெயர்மன்னும் கண்ணகி எண்பாள் மண்னோ
கோவலன் அறிமுகம் ஆங்குப், 30 பெருநிலம் முழுதுஆளும் பெருமகன் தலைவைத்த ஒருதனிக் குடிகளோடு உயர்ந்துஓங்கு செல்வத்தான் வருநிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்து வான் எண்பாண் இருநிதிக் கிழவண் மகன் ஈர் எட்டு ஆண்டு அகவையான் அவனும் தான் 35 மணிதேய்த்த புகழினாண் மதிமுக மடவார்தம் பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக் 'கண்டு ஏத்தும் செவ்வேள்' என்று இசை போக்கிக்
காதலால் கொண்டு ஏத்தும் கிழமையாண் கோவலன் எண்பான் மண்னோ
மன நிகழ்ச்சி
அவரை, 40
இருபெருங் குரவரும், ஒருபெரு நாளால்,
மனஅணி காண மகிழ்ந்தனர் மகிழ்ந்துழி,
யானை எருத்தத்து, அணிஇழையார் மேல் இரீஇ
மா நகர்க்கு ஈந்தார் மணம்.
அவ்வழி, 45
முரசு இயம்பின முருடு அதிர்ந்தன முறை எழுந்தது பணிலம்; வெண்குடை