பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரந்தரு காதை 199

'மண்னர் கோவே, வாழ் கெண் றேத்தி, முந்நூல் மார்பன் முண்ணியது உரைப்போன்

'மறையோன் உற்ற வான்துயர் நீங்க, 120 உறைகவுள் வேழக் கையகம் புக்கு, வானோர் வடிவம் பெற்றவன் பெற்ற காதலி-தண்மேற் காதலர் ஆதலின், மேல்நிலை உலகத்து அவருடன் போகும் தாவா நல்லறம் செய்திலர்; அதனால், 125 அஞ்செஞ் சாயல் அஞ்சாது அணுகும் வஞ்சி மூதூர் மாநகர் மருங்கில் பொற்கொடி தன்மேற் பொருந்திய காதலின் அற்புளம் சிறந்தாங்கு அரட்டன் செட்டி மடமொழி நல்லாள் மனமகிழ் சிறப்பின் 130 உடன்வயிற் றோராய் ஒருங்குடன் தோண்றினர்; ஆயர்முதுமகள் ஆயிழை தன்மேல்

போய பிறப்பிற் பொருந்திய காதலின், ஆடிய குரவையின், அரவணைக் கிடந்தோன் சேடக் குடும்பியின் சிறுமகள் ஆயினள் - 135

நற்றிறம் புரிந்தோர் பொற்படி எய்தலும், அற்புளஞ் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்; அறப்பயன் விளைதலும், மறப்பயன் விளைதலும் பிறந்தவர் இறத்தலும், இறத்தவர் பிறத்தலும்; புதுவ தன்றே; தொன்றியல் வாழ்க்கைஆண் ஏறு ஊர்ந்தோன் அருளில் தோன்றி, மாநிலம் விளக்கிய மண்னவண் ஆதலின், செய்தவப் பயண்களும், சிறந்தோர் படிவமும் கையகத் தனபோற் கண்டனை யன்றே! ஊழிதோறு ஊழி உலகங் காத்து,