பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 249

அறவாழ்க்கை

தருக்குமிக்க வாழ்க்கை இன்பச் செருக்கோடு திகழ்கிறது. இவ்இன்ப வாழ்க்கை அவர்கள் அன்பினை மலரச் செய்யத் துணை செய்கிறது. அன்பும் அறனும் சேரும் போதே வாழ்க்கை பயன்மிக்கதாக மாறுகிறது; மலர்கிறது.

கோவலனின் தாய் ஆகிய அவ்வீட்டுப் பேரியல் கிழத்தி அவளைத் தனியே குடி வைத்து உரிமையுடன் வாழவழி வகுத்தாள். அன்போடு அமைந்த அவ்வாழ்வு அறத்தோடு இயைந்து பண்பும் பயனும் கொண்டதாக முழுமை பெற்றது. சுற்றமும், அறவோர்களும், விருந்தினர்களும் அவள் வீடு தேடி வந்தனர். சுற்றம் சூழ இருந்து நற்றவம் மிக்க இல்வாழ்க்கையை நடத்தினாள். இவ் இன்ப வாழ்க்கை சில ஆண்டுகளே நீடித்தது.

அவர்கள் அடைந்த இன்பத்துக்கு எதனை உவமையாகக் கூறுவது? காமத்தில் கலந்து மகிழும் பாம்புகளைத்தான் உவமை கூற முடியும்; இவர்கள் நிலையாமையைக் கண்டு அது பயன்படக்கழிய வேண்டும் என்ற கொள்கை உடையவர் போல் வாழ்க்கையை நேசித்தனர். இடையறாத மகிழ்வு கண்டனர்.

3. மாதவியுடன் தொடர்பு (அரங்கேற்று காதை)

மாதவி

ஆண்டுகள் சில கழிந்தன; அதற்குள் புதிய தொடர்பு எழச் சூழல்கள் உருவாயின.

நாட்டிய அழகி மாதவி ஆடல், பாடல், அழகு இம் மூன்றிலும் தேர்ந்தவள் ஆயினாள். அவள் ஊர்வசி மரபில் வந்தவள் என்று பேசப்பட்டது. அதற்கு ஒரு கதையும் கூறப்பட்டது.

இந்திரன் அவையில் சந்திரன் எனத் திகழ்ந்த சயந்தனைக்

காதலித்த நடனமாது ஆகிய ஊர்வசி நாட்டியம் பிறழ்ந்தாள். அதனால் அவள் மண்ணுலகில் பிறக்கச் சாபம் பெற்றாள். அவள்