பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 குன்றக் குரவை

துவுங்கள்: ஒரு முலை இழந்த நங்கை இவள் நம் பெருமலை தொடர்ந்து வளம் சுரக்க அருள் செய்வாள்' என்று கூறினர்.

அனைவரையும் ஒன்று திரட்டி, "மலை அருவி ஆடு வோம். வாருங்கள். இது இங்கு வந்த புதுப்புனல் ஆகும். இது பொன் துகளை வாரிக் கொண்டு வருகிறது; இது நம் தலைவன் மலையாகும்; அவனோடு நாம் புலவி கொள்வதற்குக் காரணமே இல்லை. எனினும் நம்மைத் தவிர்த்து மற்றவர்கள் இதில் வந்து நீராடினால் நம் நெஞ்சு நோகும்; வேதனைப்படும்; அதைப் பொறுக்க மாட்டோம்' என்றனர்.

தெய்வத் திருப்பாடல்

நீராடி முடித்த பின் தோழியர் தம் தலைவியை நோக்கி 'நீராடினோம் நாம்; இனி நாம் செய்யத் தக்கது யாது?’ என்று வினவினர்.

'கடலில் சூரபதுமனைக் கொன்ற வேலவன் ஆகிய முருகனைப் பாடுவோம்; அவனை வைத்துக் குரவைக் கூத்து ஆடி அவனைச் சிறப்பித்துப் பாடுவோம்' என்றனர். முருகனைச் சிறப்பித்துப் பாடினர்.

'ஆறுமுகத்தினன்; பன்னிரு கையினன், முருகவேள், இவன் வேல் ஏந்தி நின்றான்; மயில் மீது ஏறிச் சென்று அயில் வேல் தாங்கிக் கடலில் சூரபதுமனைக் கொன்றான்; அவுணர் களை அழித்தான்; அவன் தன் வேலைக் கொண்டு கிரவுஞ்ச மலையைப் பிளந்தான்' எனப்பாடினர். அடுத்து அகப் பொருள் துறை அமைய அவர்கள் பாடத் தொடங்கினர்.

'தலைவன் தந்த நோய் இதை அறியாத தாய் பூசாரியைக் கொண்டு வெறியாட்டு நடத்துகிறாள். இது நகைக்கத் தக்கது ஆகும். கோயில் பூசை செய்யும் பூசாரி வருவானாம். அவன் வழிபாடு செய்ய முருகன் வருவானாம். அவன் நம் நோயைத் தீர்ப்பானாம். இது மடமையன்றோ! அப்படி வந்தால் அந்த முருகன் ஒன்றும் அறியாதவனே ஆவான். எல்லாம் விளையாட்டாக முடியும். சிரிப்புத்தான் வருகிறது சிந்தித்துப் பார்த்தால்' என்றனர்.

‘'வேலைத் தாங்கிய வேலவன் ஆகிய முருகன் வந்தால் எம் குறமகள் தான் விரும்பிய காதலனை மணக்க அருள் செய்க