பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 - காட்சிக் காதை

சேரன் கருத்துரை

தென்னவன் அரசன் அவன்தன் பழி மிக்க வாழ்வினைக் கேட்ட சேர மன்னன், 'செம்மை நீங்கிய சொற்கள் எம்மைப் போன்ற அரசர்கள் செவியில் விழுந்து வெம்மை ஊட்டாமல் இருக்கப் பாண்டியன் தன் உயிர்விட்டான் என்று நினைக்கவும் தோன்றுகிறது. வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கிவிட்டது,' என்று கூறினான். மற்றும் அரசர்க்கு உள்ள துன்பங்கள் இவை என்று வரிசைப்படுத்திக் கூறினான்.

'மழை பொய்த்துவிட்டால் அது மிகப்பெரிய கவலை யைத் தருகிறது; அதுபேரச்சத்தை உண்டாக்குகிறது. நாட்டு மக்கள் தவறு இழைத்தால் அது மன்னனைத் தாக்குகிறது; அவ்வாறு ஏதாவது நேர்ந்து விடுமோ என்ற அச்சம் எப் பொழுதும் நச்சரிக்கிறது. மக்களைக் காக்கும் அரச குடியில் பிறத்தல் துன்பம்தான் அன்றி மதிக்கத் தக்கது அல்ல; பாராட்டித் தொழத் தக்கதும் அல்ல.” இவ்வாறு சாத்தனார்க்குச் சேரன் தன் கருத்துகளைக் கூறினான்.

பின்பு தன் மனைவியை நோக்கி, 'உயிர்விட்டுப் புகழ் பெற்ற ஒருமகள் பாண்டியன் மனைவி ஆவாள்; உயிருடன் இங்கு வந்து வழக்கினை உலகறியச் செய்ய வந்திருக்கிறாள்.' மற்று ஒரு மகள்; அவள் இந்நாடு அடைந்திருக்கிறாள். இவ்விருவருள் வியக்கும் நலத்தை உடையவர் யார்?' என்று வினவினான்; இருவரில் யார் உயர்ந்தவர் என்று கேட்டு வைத்தான். சேரமாதேவி நாகரிகமாக அதற்கு விடை நல்கினாள்.

'பாண்டிமா தேவிக்கு வானவர் சிறப்புச் செய்வர்; பாவை கண்ணகிக்கு நாம் சிறப்புச் செய்வோம். நம் நாட்டை அடைந்த பத்தினித் தெய்வத்துக்குக் கல் எடுத்துப் பரவுதல் செய்வோம்' என்றாள்.

சேரன் அருகிருந்த நூல்கள் கற்ற புலவர்களை நோக்கினான். அதற்கு அவர்கள், 'இமயத்தில் இருந்து கல்லைக் கொணரலாம் அல்லது பொதிகை மலையில் இருந்தும் கொண்டு வரலாம். முன்னதைக் கங்கையில் நீர்ப்படுத்தலாம்; பின்னதைக் காவிரியில் நீர்ப்படுத்தலாம்' என்று அவர் தம் கருத்தினைத் தந்தனர்.