பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

களே ஊட்டிவிடும் என்பது அசைக்க முடியாத உண்மை.”

“நான் சொன்ன நிகழ்ச்சிகளில் மூன்று பெரிய உண்மைகளையல்லவா கண்டுவிட்டீர்கள்? உங்களுடைய அறிவு, உலகுக்குப் பொதுவான உண்மைகளைக் காணுவதில் நாட்டமுடையதாக இருக்கிறது.”

“ஆம்; இத்தனை நேரம் அந்த மூன்று உண்மைகளையும் சிந்தித்துக்கொண்டே இருந்தேன். நினைக்க நினைக்க வியப்பாயிருக்கிறது. அதோடு மற்றொர் எண்ணமும் தோன்றுகிறது.”

“என்ன? சொல்ல வேண்டும்.”

“இந்த மூன்று கருத்துக்களை அடிப்படையாக வைத்து இந்தக் கதையைக் காவியமாக இயற்றலாம் என்று தோன்றுகிறது. எல்லாவற்றிற்கும் சிலம்பு காரணமாக இருக்கிறது. ஆதலின் சிலப்பதிகாரம் என்ற பெயரை வைத்துக் கண்ணகியின் கதையை விரிவாக நாம் பாடலாம் என்ற எண்ணம் எழுகிறது. உங்கள் கருத்து என்ன?”

“நன்றாகச் செய்யலாம். முடியுடை வேந்தராகிய மூன்று பேர்களும் இந்தக் கதையில் வருகிறார்கள். கண்ணகி பிறந்த சோழ நாடும், அவள் கணவனை இழந்த பாண்டி நாடும், தெய்வம்ஆன சேர நாடும் கதைக்கு இடமாக இருக்கின்றன. மூன்று அரசர்களுக்கும் உரிய இதனைத் தாங்களே அருளிச் செய்யலாம்” என்றார் சாத்தனார்.

“சாத்தனாருக்கு அந்தக் காவியத்தைத் தாமே இயற்றவேண்டும் என்ற அவா உண்டாயிற்று.