பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

135


இந்த நேரம் வந்ததும் காதலரைப் பிரிந்தோர் துன்புற்றனர். காதலரைப் பிரியாதார் இன்புற்றனர்.

கோவலர் குழலில் முல்லைப் பண் இசைத்தனர். வண்டுகள் முல்லை மலரில் வாய் வைத்து ஊதின.

மலர் மணத்தைத் தென்றலானவன் எங்கும் துாற்றினான் - அதாவது - மண்முடன் தென்றல் வீசியது மகளிர் மணி விளக்கு ஏற்றினர்.

இளைய ராயினும் பாண்டியர் பகைவர்களை வென்றது போல், வெண் பிறை நிலா அந்திமாலை என்னும் குறும்பை வென்று விண்மீன்களை ஆண்டது. குறும்பு = குறும்பர்கள். அந்திமாலை குறும்பராக உருவகிக்கப் பட்டுள்ளது - அதாவது அந்திமாலை கழியத் தொடங்கியது என்பது கருத்து.

காதலரைப் புணர்ந்த மாதவி போன்றோர் களியாட்டயர்ந்தனர் - காதலர் பிரிந்த கண்ணகி போன்றோர் துயரம் பெருகினர். காமவேள் வெற்றிக் களிப்புடன் திரியலானான். அந்திமாலை நிகழ்ச்சிச் சுருக்கம் இது.

இளங்கோ இதற்கென்று ஒரு தனிக்காதை செலவிட்டடுள்ளார். முப்பது காதைகள் வேண்டுமே என்பதற்காக இவ்வாறு செய்திருப்பாரோ!