பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

சுந்தர சண்முகனார்


வேனில் காதையில், கண் கூடு வரி, காண்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சிவரி, காட்சிவரி, எடுத்துக்கோள் வரி என்னும் எட்டு நடிப்புக் கூறுகள் சொல்லப்பட்டுள்ளன.

ஐந்திணைக் கூறுகளுள் மருதக் கூறு இந்திர விழவூர் எடுத்த காதையிலும், நெய்தல் கூறு கானல்வரிக் காதையிலும், பாலைக்கூறு வேட்டுவவரிக் காதையிலும், முல்லைக்கூறு ஆய்ச்சியர் குரவைக் காதையிலும், குறிஞ்சிக் கூறு குன்றக் குரவைக் காதையிலும் இடம்பெற்றுள்ளன.

நாடகக் களம்

The Art of play Writing என்னும் ஆங்கில நூலை யான் நாற்பது ஆண்டுகட்கு முன்பு படித்தேன். படித்த போது, இதன் படியே சிலப்பதிகாரம் அமைந்திருக்கிறதே - ஒருவேளை, சிலப்பதிகாரத்தைப் பார்த்துத்தான் யாராவது இந்த இலக்கணத்தை வகுத்திருப்பார்களா? என்று ஐயப்படும்படியாகவும் இருந்தது. இது நிற்க-

சேக்சுபியரின் (Shakespeare) நாடகங்களில் ஐந்து களங்கள் (Acts) இருக்கும். அந்த வகையில் சிலப்பதிகாரத்தைப் பின் வருமாறு ஐந்து கட்டங்களாகப் பகுக்கலாம்.

1. தொடக்கம்: திருமணம் (மங்கல வாழ்த்துப் பாடல்) முதல் கானல் வரி வரையும் தொடக்கம் ஆகும்.

2. வளர்ச்சி: கானல் வரியிலிருந்து அடைக்கலக் காதைவரை வளர்ச்சியாகும். (வளர்ச்சியிலேயே ஒரு திருப்பம் என்றும் கூறலாம்).

3. உச்ச கட்டம் (climax); கொலைக்களக் காதை, இது 30 காதைகளுள் 16-ஆம் காதையாகும்.