திறஞய்வாளர் 57 தேவையான பரிவும் கற்பனையும் தம்மிடத்தே கொண்ட தகுதியான புலவரொருவர் கடந்த இருபத்தைந்து ஆண்டு களில் நம் இலக்கியத்துடன் சேர்க்கப்பெற்ற சமூக நாடகம், உணர்ச்சிப் பாடல்கள், நிகழ்ச்சியுரைக்கும் பாடல்கள், எள்ளல் குறிப்புடைய பாடல்கள், சமூக-உளவியல் அடிப் படையிலெழுந்த புதினங்கள், நகைச்சுவை பொங்கும் கதைகள், வரலாறுகள் முதலியவை அடங்குமாறு நிறை தீர்வான சமகாலத்து இலக்கிய வரலாறு ஒன்றை எழுத வேண்டும் என்று விரும்புகின்றேன். உண்மையிலேயே உறுதியான பரிவும் கற்பனை வளமும் அவரிடம் இருந்தன. ஆனால், நம்முடைய அவப்பேற்றின் காரண மாகப் போதுமான காலமும் ஆற்றலும் அவருக்கு இல்லை. திறனய் வாளர் என்ற முறையில் அவர் இலக்கியத்தில் திறய்ைவுச் சிந்தனை யை மரபு முறையில் குறிப்புரை தரும் போக்காகிய பழைய நீண்ட பள்ளத்தினின்றும் விடுவித்தார். பொறுப்புடன் ஆழ்ந்து கற்கும் மாளுக்கருக்கு அவர் ஒரு புதிய தொலைத் தோற்றத்தைக் காட்டி யுள்ளார்; நேர்மையான திறனாய்வாளருக்கு ஒரு புதிய மதிப் பீட்டு அளவுகோலை நல்கியுள்ளார். உண்மையில் அவர் புதிய திறய்ைவாளர்கள் யாவருக்கும் முதலானவர்; முன்னேடியாகவும் திகழ்ந்தவர். இயல் ஒன்பது கட்டுரையாளர் கவிஞரின் மேம்பட்ட உணர்ச்சியும் திறய்ைவாளரின் அறிவுக் கூர்மையும் கொண்டிருந்த ரெட்டியவர்களிடம் கட்டுரையாளரின் இயற்கையறிவும் சேர்ந்தமைந்திருந்தது. இலக்கியத்திறளுய் வாளராக அவர் இருந்தது போலவே வாழ்க்கையின் திறனாய்வாள ராகவும் திகழ்ந்தார். அவரது இலக்கியப் பணியளவு குறை வாக இருந்தபோதிலும் அவர் அறிந்த பொருள்களின் பரப்பு மிக விரிந்து கிடந்தது. கட்டுரையாளர் என்ற முறையில், தம்முடைய கட்டுரைக் கலையைத் திட்பநுட்பப் பண்புடன் சொற்சுருக்கமும்