பக்கம்:சீனத்தின் குரல்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

சீனத்தின் குரல்


வர்களை வெளியேற்ற வேண்டும். இந்த இரண்டிலொன்றுதான் செய்ய முடியும். ஆனால் மகாராணியார் பல நாட்கள் உட்கார்ந்து பழகிவிட்ட சிங்கத்தனத்தை இழக்கச் சம்மதிப்பார்களாம். ஆகவேதான் அங்கீகாரம் அளிக்க மறுத்து விட்டார்கள்.

போட்ட திட்டங்கள் பொல்லாத இராணியால் பொடிப் பொடியானதை எண்ணி கல்விச் சங்கத்தை புரட்சி சங்கமாக மாற்றியமைத்துக்கொண்டு, ஆங்காங்கே புரட்சிக்கு ஆட்களைச் சேர்த்துக் கொண்டிருந்தார் சன்-யாட்-சன். இதையறிந்த சர்க்கார் தன் இரும்புக் கைகளை ஓங்கியது. அடி பலமாக விழும் என்று தெரிந்தவுடனே வெளிநாட்டுக்கு ஓட்ட மெடுத்தார் சன்-யாட்-சன். புரட்சி வளரவேண்டுமென்ற பெருநோக்கால் பல நண்பர்கள் தாராள சிந்தையோடு 6000 டாலர்கள் புரட்சி இயக்கத்துக்கு நன்கொடையாக வழங்கினார்கள். சீன நாடு முழுதும் சன்-யாட்-சன் தேடப்பட்டார். ஒற்றர்கள் புகுந்து பார்க்காத இடமில்லை. எங்கும் கிடைக்கவில்லை சன். ஆள் கிடைக்காமல் போகவே சர்க்காரின் பீதி பன்மடங்கு அதிகமாயிற்று. ஆனால் சன்-யாட்-சன். இங்கிலாந்துக்கு ஓடிவிட்டார்.

பனிரெண்டு நாட்கள் சிறையில்

இங்கிலாந்தில் பல நாட்கள் மாறுவேடத்தோடு திரிந்தண்டிருந்தார். இதற்கிடையில் கிருஸ்து மதத்தில் சேர்ந்து கொண்டார். ஒருநாள், மாதா கோயிலுக்கு போகும் வழியில் கைது செய்யப்பட்டு