பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 91

பாடலை எடுத்துக் கொண்டு போய், என் உடன் பாடில்லாமல் வெளியிட்டிருக்கிறீர்களே! இது பெரிய தப்பு. அம்மாவும் சேர்ந்து இதைச் செய்திருக் கிறார்கள்?' என்று தமக்கே உரிய உரத்த குரலில் கடிந்து கொண்டார்.

'பிள்ளைகள் ஆசைப்பட்டார்கள், அதற்காக ஏன் இவ்வளவு கடுமையாகப் பேச வேண்டும்?' என்று எங்கள் சார்பாக வாதாடி னார்கள் அம்மா.

சீற்றம் மேலும் மிகுதியாயிற்று. நான் எவ்வளவோ அமைதி கூறினேன். அடங்கவில்லை. விட்டு விட்டேன். அவர் பேசும் வரை பேசி விட்டு, அமைதியுற்றார்.

இது தான் வேளையென்று கருதி நான், ஐயா உங்கள் ஒப்பு தலின்றி இதனை வெளியிட்டது தவறுதான். ஆனால் இத்தவற்றை நாங்கள் செய்யாதிருந்தால், நீங்கள் 'தேசத் துரோகம்' செய்தவர் களாகக் கருதப் படுவீர்கள் என்றேன்.

'என்ன அப்படிச் சொல்கிறாய்?' என்றார்.

ஆம்; பாரதியின் பாடல்கள் நாட்டுக்குரிய சொத்து. பொதுச் சொத்தாகிய பாரதியின் பாடலொன்றை நாட்டுக்குக் கொடுத்து விடாமல் மறைத்து வைப்பது நாட்டுக்குச் செய்யும் குற்றமல்லவா? என்றேன்.

உரத்துச் சிரித்து விட்டார். அதன்பின் அமைதியாகப் பேசினார். 'நீங்கள் வெளியிட்டது தப்பில்லப்பா; பாரதி இந்தப் பாடலில் என்னை இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்திருக் கிறார். நான் இப்பொழு திருக்கும் நிலையில் இது வெளிவந்தால் ஊரார் என்ன நினைப் பார்கள்? ஏதோ உள் நோக்கத்தில் விளம்பரப்படுத்திக் கொள்கிறான் என்றுதானே எண்ணுவார்கள்.