பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 107

செல்ல எண்ணிப் புறப்பட்டு வாயிலுக்கு வந்து விட்டார். அப்பொழுது நண்பர் சிலர் எதிரில் வந்து விட்டனர்.

வெளியிற் செல்வதாக எவ்வளவோ எடுத்துக் கூறியும் நண்பர்கள் விடவில்லை. சிறிது நேரம் சீட்டாடி விட்டுச் செல்லலாம் என்று வற்புறுத்தினர். இவருக்கும் அவ்விளை யாட்டில் விருப்பமுண்டு. வற்புறுத்தலுக்கு இசைந்து விட்டார். சீட்டாடுவது அக்கால இளைஞர்க்கு ஒரு பொழுதுபோக்கு.

சீட்டாட்டம் தொடங்கியது. மும்முரமாக நடைபெற்றது. சீட்டாட்டம் ஆடும்பொழுது துப்பாக்கியை மடியின் மேல் வைத்து, அதன் மேல் ஒரு தலையணையையும் வைத்து ஆடிக் கொண்டிருந்தார். அருகிலிருந்தவர் தலையணை மேல் கையை வைத்து அழுத்தி விட்டார். சண்முகனார் தம் மடியில் வைத்துக் கொண்டிருந்த துப்பாக்கி வெடித்து அவருடைய துடையில் குண்டு பாய்ந்து விட்டது. குருதி வழிந்து வேட்டியை நனைத்து விட்டது.

அருகிலிருந்தவர் அஞ்சி நடுங்கி விட்டனர். ஆனால் சண்முக னாரோ சிறிதும் அஞ்சினாரல்லர். "சத்தமிடாமல் என்னுடன் வாருங்கள்" என்று கூறி விட்டார். தோழர்கள் துணையுடன் தமது மகிழுந்தில் மருத்துவமனைக்குச் சென்று, அறுவை செய்து, குண்டை எடுத்துவிட்டு, மருந்திட்டுக் கொண்டு, கட்டுடன் வீடு திரும்பினார்.

கட்டுடன் கண்ட வீட்டார், 'ஆ' என்ன இது '-' என்று அலறி விட்டனர்.

'ஒன்றுமில்லை; துடையில் கட்டியொன்று புறப்பட் டிருந்தது. அதை ஆபரேசன் செய்து கொண்டேன்' என்று அமைதியாக மறுமொழி தந்தார்.