பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 0 இந்த நூல் வெளியிடுவது சம்பந்தமான எண்ணத்தை எனது பெரும் மதிப்பிற்குரிய அருமைத் தம்பி கவியரசர் முடியரசனிடம் வெளியிட்டேன். நூல் தொகுத்து வெளியிட உதவி புரியுமாறு கேட்டுக் கொண்டேன். முன் நிகழ்ச்சிகள் தெரியாத நிலையில் தம்பி முடியரசன் சிறிது தயங்கினார். பின்னர் உதவி புரிவதாக ஒப்புக்கொண்டார். பெரும் முயற்சி எடுத்துச் சான்று களைப் பெற்று இந்த நூல் வெளிவரச் செய்த அருமைத் தம்பிக்கு எனது உளமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். நாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க உளம் நிறைந்த மகிழ்ச்சியுடன் எழுத்தோவியம் வழங்கிய முத்தமிழ்க் காவலர் உயர்திரு கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள், சொக்கலிங்கம் புதுரர் திரு பொன். முத்தழகப்ப செட்டியார் அவர்கள், திரு. ராம. சுப்பையா அண்ணன் அவர்கள், திரு. நீலாவதி ராமசுப்பிரமணிய அண்ணன் அவர்கள், பாவலர் மணி புலவர் திரு. ஆ. பழநி அவர்கள், திரு. முல்லை முத்தையா அவர்கள், திரு. எஸ்.பி. முத்து ராமன் அவர்கள், அனைவர்க்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் அண்ணன் மக்களிடமும் என் புதல்விகளிடமும் 'ஐயா அவர்கள் குறித்து உங்கள் அனுபவத்தை எழுதித் தாருங்கள்' என்று கூறினேன் அதன்படி எழுதித் தந்தனர். என் அண்ணன் மக்கள் திரு. ராசா சண்முகம் அவர்களுக்கும், திருமதி கமலா முத்துராமனுக்கும், திருமதி சாந்தா சோமசுந்தரம் பி. எஸ்.ஸி.,க்கும், என் புதல்விகள் திருமதி. சுசீலா சுப்பிரமணியத்திற்கும், திருமதி டாக்டர் மணிமேகலை மாதவன் எம். டி.,க்கும் எனது அன்பினைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இந்த நூலை வானதிப் பதிப்பகம் மூலம் வெளியிடக் கருதி அதன் உரிமையாளர் திரு. திருநாவுக்கரசு அவர்