பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 163

அவர்கள் கூறிய நெறிமுறைகள் எனக்கு விவேகத்தை அளிக்கும்.

இன்னொரு நிகழ்ச்சி என் நினைவிற்கு வருகிறது. ஒரு முறை ஐயா அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது. ஐயா அவர்கள் கேட்டுக் கொண்டபடி மயக்க மருந்தின்றி விட்டிலேயே அறுவை சிகிச்சை நடந்தது. ஐயா அவர்களின் மனவலிமைக் கண்டு டாக்டரே அயர்ந்து போனார். அந்தக் காலத்தில் இரண்டுமுறை வாதம், பேச்சின்மை வந்த போது, ஐயா அவர்கள் தியானப் பயிற்சியினாலும் அளவற்ற மன வலுவினாலும், இரத்தக்குழாய் அடைப்பு விலகி, பூரண நலம் பெற்றார்கள். நான் படித்த மருத்துவத் துறைக்கு, ஐயா அவர்கள் சவாலாக விளங்கினார்கள். கட்டுப் பாடான உணவு முறை களிலும் சித்த வைத்தியத் துறையிலும் நிறைந்த ஈடுபாடு காண்பிப்பார்கள். எப்படிப்பட்ட கஷாயமானாலும் கடும் கசப்பாக இருந்தாலும் ஐயா அவர்கள் சிரித்த முகத்துடன் சாப்பிடும் காட்சி என் நினைவில் பசுமையாக உள்ளது. மூலிகை மருந்துகள், புதிய முறைகட்குத் தம்மையே பரிசோ தனைக்கு மனமுவந்து உட்படுத்திக் கொள்வார்கள். நான் இறுதியாண்டு மருத்துவப் படிப்பு படித்துக் கொண்டிருந்த போது, சிறு விடுமுறையில் ஐயா அவர்களைப் பார்க்கப் போன போது புதிய மூலிகை மருந்தினை உட்கொண்டு வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந் தார்கள். அந்த நிலையில் "நீ படிப்பதுடன் நில்லாது, மூலிகை மருந்துகளில் கவனம் செலுத்த வேண்டும். நம் நாட்டில் உள்ள மூலப் பொருட்கள் மூலிகைகள் - அவற்றிலிருந்து தான் வெளி நாட்டு மருந்து வருகிறது" என்றார்கள். அவற்றை நான் மருந்தியலில்