பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

204 சீர்திருத்தச் செம்மல்


"கன்னெடுங் காலம் வெதும்பிக் கருங்கடல் நீர்சுருங்கிப் பன்னெடுங் காலம் மழைதான் மறுக்கிலும் பஞ்சமுண்டுஎன்று என்னொடும் சூள்அறும் அஞ்சல்நெஞ் சேஇமை யாதமுக்கண் பொன்னெடுங் குன்றம்ஒன்று உண்டுகண் டீர்இப் புகல்இடத்தே."

"என் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற பாடல்களில் வெளிப்படையாகத் தோன்றும் பொருளைக் கருதி, ஊக்கம் கொண்டு, நம் வழித் தோன்றல்களாகிய வாலிபர்கட்கு வழிகாட்ட வேண்டியும், நமது இந்து மதாபிமான சங்கத்திற்கு நல்வளர்ச்சி நல்குமாறும், நமது நண்பர் சொ. முருகப்பா அவர்கட்கு நீண்ட நல்வாழ்வைத் தருமாறும், எல்லாம் வல்ல சக்தியைப் பிரார்த்திப்போம் ஆக.

முற்றும்