பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

22 சீர்திருத்தச் செம்மல்

வெற்றி கிட்டியது. இறுதியாக வழக்கு முடியுமுன் சண்முகனார் இயற்கையெய்தி விட்டார். அவர் வாழ்நாளிற் பெரும் பகுதியை இவ்வழக்கு எடுத்துக் கொண்டு விட்டது. செட்டிநாட்டில் இவ்வழக்குப் பரவலாக (பிரசித்தமாக)ப் பேசப்பட்டது. ஏறக்குறைய நாற்பது நாற்பத்தைந்தாண்டுகள் இவ்வழக்கு நீடித்தது.

வழக்கிலும் பொதுத் தொண்டிலும் முழுமையாக ஈடுபட்டமை யால், தம் தொழிலைக் கவனிக்க இயலாது போயிற்று. இவ்வழக்கின் பொருட்டுச் செலவிட்ட தொகை பல இலக்கமிருக்கும். இதனாற் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்பட்டு வறுமைக்கு ஆளானார்.

இல்லறப்பயன்

சண்முகனார், இலக்குமி இருவரும் ஒரு மனம் உடையவராகி இல்லறம் நடத்தி வந்தனர். தற்காத்தலும் தற்கொண்டானைப் பேணலும் தகை சான்ற சொற்காத்தலும் சோர்வின்மையும் ஆகிய பெண்டிர்க்குரிய இலக்கணங்கள் நிரம்பப் பெற்று, நற்குண நற்செய்கைகள் உடையவராய் இலக்குமி ஆச்சி அவர்கள் திகழ்ந் தமையால், ‘இல்லதென் இல்லவள் மாண்பானால்?’ என ஊரார் போற்றும் வண்ணம் அவர்கள் இல்லறப் பாங்கு விளங்கியது.