பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சீர்திருத்தச் செம்மல் மறுமணம் ஒரு செட்டியார் வீட்டுப் பெண், இளமையில் கணவனை இழந்து விட்டாள். கைம்மைக் கொடுமையை எவ்வளவு நாள் தான் தாங்கிக் கொள்ள முடியும்? இளமையுணர்வுகளை- இயற்கை உணர்ச் சிகளை எத்தனை நாள் கட்டுப்படுத்தி வைக்க முடியும்? மனித உணர்ச்சிக்கு ஆட்பட்ட அப்பெண் ஒருவரை விரும் பினார். மனைவியை இழந்த அவரும் இப்பெண்ணை விரும்பினார். இருவரும் நம் சண்முகனாரிடம் வந்து உண்மையை உரைத்தனர். இருவரும் உள்ளன் போடு ஒருவரையொருவர் விரும்புகிறீர்களா? என வினாவினார். ஆம்'- என்றனர். அப்படியானால் திருமணம் செய்து கொள்ளுங்கள். பிறரறியாமல் திருட்டுத்தனமாக நடப்பது அயோக்கியத் தனம். பழிச்சொல்லுக்கும் இடமாகும். அதனால் துணிந்து திருமணம் செய்து கொள்வதுதான் நல்லது என்று கூறினார். அப்பெண்ணுக்கு உறவினர் ஒருவர் இவரிடம் வந்தார். சினந்த முகமும் சீறிய பார்வையும் உடையவ ராகி உள்ளே வந்தார். சண்முகனாரிடம் அப்பொழுது நான் உரையாடிக் கொண்டிருந்தேன். சண்முகனார் வந்தவரை நோக்கி, முறைப்படி வாங்க இருங்க!' என்றார். வந்தவர் அமர வில்லை; வரவேற்புக்கும் மறுமொழி தரவில்லை.