பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

1800 கூரான் ஏந்தல் பட்டம்

சுந்தரசாஸ்திரி வகையறா சுந்தரம்
ஐயர், முத்து ஐயர், தர்மாசனம்.


இந்த நிலக்கொடைகள் பற்றி கிடைத்துள்ள சில செப்பேடுகளின் உண்மை நகல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

1. மச்சூர் செப்பேடு

இந்தச் செப்பேடு கி.பி. 1782ல் விசைய ரகுநாத பெரிய உடையாத் தேவர் அவர்களால் திருப்பனந்தாள் பண்டார சன்னிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முத்து வடுகநாதத் தேவரது ஆட்சியில், காசியில் சிவகங்கைச் சீமையின் முதல் மன்னரது புண்ணியமாக மடமும் கட்டி அன்னதானக் கட்டளையினை ஏற்படுத்தினார். அந்த தர்மம் சிறப்பாகத் தொடர்ந்து நடைபெறுவதற்கு மன்னர்ஆணையார்கோட்டை மச்சூர் ஆகிய இரண்டு ஊர்களையும் சர்வ மானியமாக வழங்கி இருப்பதை இதைச் செப்பேடு தெரிவிக்கின்றது. இந்தச் செப்பேடும் ராணி வேலுநாச்சியார் சார்பாக விசைய ரகுநாத பெரிய உடையாத் தேவர் வழங்கி இருப்பதை ஊகித்து அறிய முடிகிறது.

1. ஸ்ரீ விசுவேசுவரன்னபூரணி சகாயம்
2. ஸ்வஸ்திஸ்ரீமன் மகாமண்டலேசுவரன்
3. அரியராய தள விபாடன் பாஷைக்கு தப்பு
4. வராத கண்டன் கண்டனாடு கொண்டு கொண்டனாடு கெ
5. டாதான் பாண்டி மண்டல ஸ்தாபனாசாரியன் தொண்ட
6. மண்டல சண்டப் பிறசண்டன் ஈளமுங்கா
7. ங்கும் யாட்பாணராயன் பட்டணமுமெம்ம
8. ண்டமுங் கண்டு கெசவேட்டை கொண்டருளிய ராச
9. திராசன் ராச பரமேசுவரன் ராசமாற்த்தாண்
10. டன் ராசகுல திலகன் அரசராவணராயன்
11. அந்தம்பர கண்டன் தாலிக்கு வேலி தளஞ்சிங்கம்
12. இளஞ்சிங்கம் சேதுகா
13. வலன் சேதுமூல ரட்சா
14. துரந்தரன் தனுக்கோ
15. டிகாவலன் தொண்
16. டியந்துறை காவல
17. ன் செம்பிவளநா
18. டன் தேவை நகராதிபன் முல்லை மாலி
19. கையான் அனுமக்கொடி கெருடக்
20. கொடி புலிக்கொடியுடையான் மும்மதயானை
21. யான் செங்காவிக்குடை செங்காவிக்கொ
22. டி செங்காவி சிவிகையான் அசுப்தி கெச
23. பதி தனபதி நரபதி ரவிகுலபதி யிரணியகெற்