பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 135

86. ஸாதன பட்டையம் எழுதி கொடுத்தபடிஇநாலே ஆண்
87. டனுபவித்து கொள்ளுவாராகவும் யிந்த தற்மத்துக்
88. குவுயிதம் பண்ணிவர்கள் காசியிலே கோடி சிவ
89. ப் பிரதிஷ்டை கோடி பிறம்ம பிரதிஷ்ட்டையும் ப
90. ண்ணின பலனைப் பெறுவாராகவும் யிந்த தன்மத்துக்
91. கு அகிதம் பண்ணினவர்கள் காசியிலேயும் ரா
92. மீசுபரத்திலேயும் கோடி காராம்பசுவையும் கோ
93. டி பிராமாணாளையும் கொன்ற பாவத்தையடைவா
94. ராகவும் இந்தபடிக்கு குமரகுருபரத் தம்பிரானவர்களு
95. க்கு விசைய ரெகுநாதப் பெரிய உடையாத் தேவரவர்க
96. ள் தற்ம சாதன் பட்டையம் எழுதிக் கொடுத்தோம்.
97. ராயசம் சொக்கப் பிள்ளை குமரான் தற்மராய பிள்ளை லிகி
98. தப்படிக்கி யிந்த தாம்பிர சாதனம் எழுதினேன் சிவகங்கை
99. யிலிருக்கும் தையல்பாகம் ஆசாரி குமாரன் ஆறுமுகம் உ ஸ்வ
100. தத்தாத்ளி குணம் புண்யம் பரதத்தானு பாலநம் பரத
101. த்தாப ஹரேன ஸ்வத்தம் நிஷ்பலம் பலேது
102. ஸ்வத்தம் பரதத்தாம் வாயோகரேத் வ
103. சுந்தராம் சஷ்டி வர்ஷ ஷைஹ்ஹஸ்ராணி
104. விஷ்டாயாம் ஐயாயதே க்ருமி ஏதஸ்மி க்ஷதை
105. ஜமை ரெயும் சுகாஸிலாம் ப்ரயுக்தை த்ரைலோ
106. கரட்சணகாத் புண்
107 ம்யத் ஸ்யாத் தஸ்யாந்த
108. சம்சயஹ சிவ
109. சகாயம் உ.

3. காளையார் கோவில் மாலையீட்டுச் செப்பேடு

காளையார் கோவில் கோட்டைப் போரில் 25.6.1772 தியாகியான மன்னர் முத்துவடுகநாதப் பெரிய உடையாத் தேவர் அவர்களது அடக்கவிடமான மாலையிட்டு மடத்தைப் பராமரிப்பதற்காக கி.பி.1780-ல் விசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவர் அவர்கள் உருவாட்டி வட்டகையில் உள்ள குளமங்கலம் என்ற ஊரினை தானமாக வழங்கியுள்ளார். கி.பி.1790-ல் தான் விசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவர் சிவகங்கைத் தன்னரசின் நான்காவது மன்னரானார். இவர் மறைந்த முத்து வடுகநாதரது ஒரே மகளான வெள்ளச்சி நாச்சியாரை மணந்தவர். கி.பி.1780-ல் ராணி வேலுநாச்சியார் சிவகங்கைச் சீமையை மீட்டவுடன் தமது கணவரது பூத உடலைத் தாங்கிய புனித இடத்தைப் போற்றும் முகமாக இந்த தானத்தை தமது மருகர் மூலம் ஏற்படுத்தியுள்ளார் என ஊகித்து அறிய முடிகிறது.
இந்தச் செப்பேடு, காளையார் கோயில் மாலையீட்டு மடத்தைப் பராமரித்து வரும் அறங்காவலரிடம் இருக்கிறது.