பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 137

39. காளையார் கோயிலில் ராச விசைய ரெகுநாத
40. சசிவற்ன முத்து வடுகனாதப் பெறிய உடையா
41. த் தேவரவர்கள் மாலையீடு மடத்துக்கு நி
42. த்திய கட்டளை பூசைக்கு தாம்பிற சாதனபட்ன
43. டயம் குடுத்தோம் பட்டையமாவது உருவா
44. ட்டி வட்டகையிலே மேலை உச்சாணிக்கு தெற்
45. க்கு பொட்டக் கோட்டைக்கு மேற்கு ஒருமேனியேந்
46. தலுக்கு வடக்கு கீள்ப்புல்லாத்தனூர்க்கு கிளக்கு இன்
47. னான்கெல்லைக் குள்பட்ட குளமங்கல முழுது
48. ம் நஞ்சை புஞ்சை திட்டுத் திடல் கீள்நோக்கிய கிண
49. றும் மோனோக்கிய மரமும் வேம்பங் கோட்டை
50. யில் பதிங்கல விறையடியும் யிந்தக் கிறாமம் வ
51. ரியிறை சகலமும் சறுவமானியமாகவும் சீமை
52. யில் குடி ஒன்றுக்கு நாலு மாகாணி பிடித்த முத்
53. திரைப் படியால் ஒருபடி நெல்லும் வாங்கிக் கொ
54. ண்டு சிவந்திப் பண்டாரம் குமாரன் அண்ணா
55. மலைப் பண்டாரமும் ராமலிங்கப் பண்டாரமும் உள்
56. ளிட்டான் மாலையீடு மடமும் பூசித்துக் கொண்டு
57. நிதி நிட்சய தரு பாசானாட்சின்னியங்களும் ச
58. கலமும் ஆச்சந்திராற்க ஸ்தாயியாக கல்லு
59. ங் காவேரி புல்லும் பூமியும் புத்திறா புத்திர
60. வரைக்கும் ஆண்டனுபவிச்சுக் கொள்ள
61. க் கடவாராகவும் இந்தத் தன்மம் பரிபாலன
62. ம் பண்ணினவற்க்கு காசியில் கெங்கா ஸ்நா
63. னமான பலனும் சிவபிரதிட்டை விஷ்ணு பி
64. ரதிட்டை பண்ணின பலத்தை அடைந்து மாற்தா
65. ண்டன் ஆயுசு பெற்றுயிருக்கக் கடவாராகவும் ஆறா
66. மொருத்தற் இத்தற்மம் அகிதம் பண்ணினபேற் கா
67. சி ராமேசுபரத்தில் காராம் பசுவைக் கொன்ற
68. பாவத்தில் போவாராகவும் இந்த தற்ம சாதனம்
69. ம் யெளுதினேன் ராயசம் சொக்குப்பிள்ளை குமார
70. வீரன் பத்தர் குமாரன் சங்கர நாறாயண பத்
71. தன் சவுமிய நாறாயண வாள்மேல் நடந்தவள் ச
72. காயம் உ காளை நாயகர் துணை சொற்
73. னவல்லி அம்பாள் சகாயம் உ