பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

44. நஞ்சை புஞ்சை மாவடை மரவடை திட்டுத்திடல் கீழ்நோக்கிய
45. கிணர் மேல்நோக்கிய மரம் சகலமும் தான சாதனமாக வரியிறை
46. ஊதியமும் சகலமும் சர்வ மானியமாக
47. (ஆறுமுகம் சகாயம்) கட்டளையிட்டபடியினாலே கல்லும் காவேரியும்
48. புல்லும் பூமியும் ஆதிசந்திருர்க்கம் வரைக்கும் புத்திர பவுத்திர பரம்பரையார்
49. ஆண்டு அனுபவித்துக் கொள்ளக் கடவாராகவும் ராசகுரு சாத்தப்பையா
50. என்று பேர் கொடுத்து சிங்கமுகத்தரணயல் திருசங்கு...
51. சங்கு சேகண்டி காவிக்குடை செண்டா அன்னக்கொடி விரு
52. தும் குடுத்திருப்பதால் இந்த தர்மத்தைப் பரிபாலனம் பண்ணி
53. ன பேர்கள் காசியிலும் ராமேசுவரத்திலும் கோடி சிவலிங்கப் பிரதிஷ்டை, கோடி பிரம்ம பிரதிஷ்டையும் பண்ணி
54. ன சுகத்தை யடைவார்கள் யிந்த தர்மத்துக்கு அகிதம் பண்ணி
55. னவன் கெங்கைக் கரையில் காராம் பசுவையும் பிராமண ஸ்ரீயையும்
56. சிசுவையும் வதைபண்ணின தோசத்தில் போகக் கடவாராகவும்
57. யிந்த தர்மசாதனம் யெளுதினேன் ராயசம் வேலாயுதம் உத்திரவுப்படிக்கு இந்த பட்டயம் வெட்டித் தந்தது.
58. தாயுமான ஆசாரி மகன் தையல் பாகம்.

2. இளையான்குடி செப்பேடு

இளையான்குடியில் உள்ள ராஜேந்திர சோழீஸ்வரர் ஆலயத்துக்கு கி.பி.1733 திருவுடையாபுரம் என்ற ஊரினை சர்வமானியமாக வழங்கியதை இந்த செப்பேடு குறிப்பிடுகிறது. இதனை வழங்கியவர் மன்னர் சசிவர்ண பெரிய உடையாத் தேவர்.

1. ஸ்ரீமன் மகாமண்டலேசுபரன் அரியபுரத்
2. ளவிபாடன் பாசைக்கி தப்புவறாயிர கண்டன் மூள
3. றாயர் கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு குட
4. தான் பாண்டி மண்டல தாபனா சாரியன் சோழ
5. மண்டல பிறதிக்ஷனாபானாசாரியான் தொண்ட மண்
6. டல பிரசண்டப் பிறசண்டன் ஈளமுங் கொங்கும் யா
7. ள்ப்பான பட்டணமும் கேயு மண்டலமு மளித்து கெ
8. சவேட்டை கொண்டருளிய நாசாதிறாசன் றாசபரமேசுபர
9. ன் றாசமாத்தாண்டன் றாசகெம்பீரன் றாசகுலசேகரன் இ
10. வுடி பாவடி மிதித்தேறுபார் கண்டன் சாவக்காற கண்
11. டன் சாமித்தொராகிய மிண்டன் பஞ்சவற்ணறாய
12. றாவுத்தன் பனுகுவார் கண்டன் சொரிமுத்து வண்
13 ணியன் திலதனுதல் மடல் மாதர் மடலெழுதும் வரு
14. சுமுகன் காமிகா கந்தப்பன் சங்கீத சாயுத்தி