பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

57. க்கு மேற்கு புலவன்வயலுக்கு வடக்கு ............குளத்துக்கு
58. கிளக்கு நவ்வதாவுக்கு தெற்கு இன்னாங்கெல்கைக்குட்பட்டதே
59. வதாயம் விற்மதாயம் நீங்கலாக நஞ்சை விரையடி 222 கலம் 1 மா இந்த னா
60. லுக்கும் புரவில் உள்ள புஞ்சையும் இந்த நயினார் திருவிளையாட்
61. டு கிராமம் னாலு கிராமத்தில் நஞ்சை பலன் புஞ்சை பலன் கூரைவரி பாசிவரி
62. சேத்துவரி வெட்டுகொல்லி சேஷவகை சொற்னாதாயம் யெப்பற்
63. பட்ட ஆதாயமும் செலது பாசாண நிதி நிட்சேப அட்டபோக தே
64. சொ சுவாமியங்களுக்கும் தானாதி வினி விக்கிறயங்களு
65. க்கும் யோக்கியமாக இந்த நயினார் திருவிளையாட்ட கிறாமத்து
66. க்கு அரமனை தற்மாசன பலவரி சறுவமாணிபமாக கட்டளையி
67. யிட்டு நயினார் சன்னதியில் தானபூறுவமாக சிவன்ராத்திரி பு
68. ண்ணியகாலத்தில் தாராதத்த பண்ணிக்கொடுத்தோம் யிந்த
69. தற்மத்தை யாதாமொருத்தர் பரிபாலன பண்ணின பேர் காசியி
70. லே சேதுவிலே ஆயிரலிங்க பிறதிஷ்ட்டை விற்ம பிறதிஷ்ட்டை
71. புண்ணியத்தை யடையக் கடவாறாகவும் இந்த தற்ம்மத்துக்கு அகி
72. தம் பண்ணினபேர் காசியிலே கெங்கை கரையிலே மாதா
73. வையும் பிதாவையும் குருவையும் காராம்பசுவையும் கொன்ற தோ
74. சத்திலே போக கடவாராகவும் இந்தப்படிக்கி இந்த தற்ம்ம
75. சாதனம் எளுதினேன் அரமனை ராயசம் சொக்கு கைஎளுத்து.

5. சிவகங்கை குடும்பர்கள் செப்பேடு

சிவகங்கை நகர் சசிவர்ண ஈசுவரர் ஆலயத்தில் கூடிய தேவேந்திர குடும்பர்கள், தங்களது குலத்தினருக்கு, நாலு கோட்டைப் பாளையக்காரறது மூதாதையான மதியார் அழகத்தேவர் வழங்கிய சிறப்புக்களை நினைத்தவர்களாக அந்தக் கோயில் திருப்பணிக்கு உதவுவதற்கு கி.பி.1752-ல் ஒப்புதல் அளித்த பட்டயம். இதுவரை சிவகங்கை சீமையில் கிடைத்துள்ள செப்பேடுகளில் மிக நீண்டதாகவும் நூற்று ஐம்பத்து இரண்டு வரிகளைக் கொண்டதுமாகும் இது.

1. உ. சுபஸ்ரீமன் மகா மண்டலேசுரன் அரியாயிர தளவிபாடன் பாசைக் குதப்புவராயி
2. ரகண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் பாண்டி.மண்டலப்பிற
3. தி சட்டாபன சாரியன் சொளமண்(ட★)லப் பிறதி சட்டாபனாசாரியன் பூறுவபட்சி
4 ம் தெட்சண உத்தர சத்த சமுத்திராதிபதி இளமுங் கொங்கு மி யாப்பாணமும் எம்
5. மண்டலமுமளித்து கெசவேட்டை கொண்ட ருளிய ராசாதிராசன் ராச