பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98சீவக சிந்தாமணி



5. பதுமையார் இலம்பகம்

விமானத்தில் சென்றவன் கீழே இறங்கவே இல்லை. அது போய்க்கொண்டே இருந்தது. “எப்படி நிறுத்துவது” என்று கேட்டான். “வெள்ளிமலைக்குப் போனால்தான் இறங்கலாம்” என்றான்.

சுதஞ்சணன் வாழுமிடமும் வெள்ளிமலைதான் என்பது தெரிந்து கொண்டான். வித்தியாதரர் அனைவரும் வெள்ளிமலை வாசிகள்; தேவர்கள் அனைவரும் பொன்னுலக வாசிகள் என்ற வேறுபாட்டை அறிந்து கொண்டான்.

அங்கே அழகிய பெண்கள் இருந்தனர். அதனால் அது அவன் அரண்மனை என்று தெரிந்து கொண்டான்.

“இத்தனை பேரை எப்படிக் கட்டி மேய்க்கிறாய்?” என்று கேட்டான்.

“கொஞ்சம் கஷ்டம்தான்; இருந்தாலும் தேவைதான்” என்றான்.

“இதனால் என்ன நன்மை?” என்று கேட்டான்.

“ஒன்று தூங்கிக் கொண்டிருந்தால் அதைத் தட்டி எழுப்பத் தேவையில்லை; சிரமம் குறைவு” என்றான்.

அவன் சொல்வது புதுமையாக இருந்தது.

அந்த ராணிகள் எல்லாம் இவனை வந்து சுற்றிக் கொண்டார்கள்.

“இவன் தான் என் நண்பன் சீவகன்”.

“பூலோகத்தில் இருப்பவர் எல்லாம் இவரைப் போலவே அழகாக இருப்பார்களா?”

“மறுபடியும் போய்ப் பார்த்து விட்டு வந்து சொல்கிறேன்” என்றான்.