பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188சீவக சிந்தாமணி



மெல்ல மெல்லப்பற்றுகள் நீங்கி அன்பும் அறனும் மிக்க இல்வாழ்க்கையின் முதிர்ச்சியாக அருள்விளக்கம் கண்டான். தான் மனித தர்மத்துக்குத் துணை நின்று உலகக் குடிமகனாகவும், அறிவும் ஒழுக்கமும் சிந்தனையும் மிக்க சான்றோனாகவும் திகழ்ந்தான். இறுதி மூச்சுவரை மானுடத்துக்கு உழைப்பதே தன் கடமையும் அறமும் ஆகும் எனக்கொண்டான். சாவைப்பற்றி அவனுக்குச் சிந்திக்கவே நேரம் இல்லாமல் பயனுள்ள வாழ்வை வாழ்ந்து காட்டினான். உலகம் போற்றும் உயர் அறிவாளன் என்ற புகழுக்கு உரியவன் ஆயினான்.