பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை பழம்பெரு இலக்கியவாதியான திருமிகு. வல்லிக் கண்ணன் அவர்களைப் பற்றியோ அவரது எழுத்துக் களைப் பற்றியோ அறிமுகமோ விளக்கமோ அவசிய மற்றது. எழுத்தையே ஒரு தவமாக, தனது வாழ்வாகவே கொண்டவர் அவர். ஒரு உயர்ந்த நிலையில் இருந்து கொண்டு தனது எழுத்துக்களை மலினப்படுத்தி விடாமல் பண்போடும், எடுத்துக்காட்டாகவும் எழுதுபவர். அவர் எழுத்தாளர்களுக்காகவும் எழுது பவர். அற்புதமான மன உணர்வுகளை நிகழ்ச்சி களை மனதில் நிற்கும் வண்ணம் நறுக்குத்தரித்தாற் போல எழுதி படிப்பவர்களது மனதில் ஆழமான் இடத்தைப் பிடித்தவர். அவரது சிறுகதைத் தொகுதியினை வெளியிடு வதில் பூங்கொடி பதிப்பகம் பெருமைப்படுகிறது. அன்புடன் வே. சுப்பையா பூங்கொடி பதிப்பகம்