பக்கம்:சுதந்திரம் பிறந்த கதை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சிறையிலே வாடினோர் எத்தனைபேர் !
        செல்வம் இழந்தவர் எத்தனைபேர்!
அருமை உயிரையும் தேசத்துக்கே
        அர்ப்பணம் செய்தவர் எத்தனைபேர்


அந்நியர் ஆட்சிநம் தேசத்திலே
        அடியோ டொழிந்திட வேண்டுமென்றே
எண்ணினர் மக்கள் அனைவருமே,
        எதிர்த்துப் புரட்சிகள் செய்தனரே.

***



ஆகஸ்ட்டுப் புரட்சி எழுந்ததுவே!
        அனைவரும் அதனில் குதித்தனரே!
வேகமாய்க் கூறினர் காந்திமகான்,
        ‘வெள்ளைய னே,வெளி யேறு!’ என்றே.


‘வெள்ளைய னே,வெளி யேறு!’ என்றே
        வீதிகள் எங்கும் முழங்கிடவே
பிள்ளை களும்அதில் சேர்ந்தனரே.
        பீதி அடைந்தனர் ஆட்சியினர்.