இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிறையிலே வாடினோர் எத்தனைபேர் !
செல்வம் இழந்தவர் எத்தனைபேர்!
அருமை உயிரையும் தேசத்துக்கே
அர்ப்பணம் செய்தவர் எத்தனைபேர்
அந்நியர் ஆட்சிநம் தேசத்திலே
அடியோ டொழிந்திட வேண்டுமென்றே
எண்ணினர் மக்கள் அனைவருமே,
எதிர்த்துப் புரட்சிகள் செய்தனரே.
***
ஆகஸ்ட்டுப் புரட்சி எழுந்ததுவே!
அனைவரும் அதனில் குதித்தனரே!
வேகமாய்க் கூறினர் காந்திமகான்,
‘வெள்ளைய னே,வெளி யேறு!’ என்றே.
‘வெள்ளைய னே,வெளி யேறு!’ என்றே
வீதிகள் எங்கும் முழங்கிடவே
பிள்ளை களும்அதில் சேர்ந்தனரே.
பீதி அடைந்தனர் ஆட்சியினர்.