இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தேச நலனை எண்ணி, எண்ணிச்
சிறையிலே உழன்றவர்.
திரணமாக எண்ணி உயிரைத்
தியாகம் செய்து சென்றவர்,
பாசங் கொண்டு நாட்டுக் காகப்
பாடு பலவும் பட்டவர்
பலரை யும்ம னத்தில் வைத்துப்
பக்தி யோடு போற்றுவோம்.
***
சுதந்தி ரத்தை வாங்கித் தந்த
தலைவர் வாழ்க, வாழ்கவே!
துணைவராக நின்று ழைத்த
தொண்டர் வாழ்க, வாழ்கவே!
விதம்விதமாய்த் துன்ப முற்ற
வீரர் வாழ்க, வாழ்கவே!
விடுதலேயைப் பெற்ற நாமும்
இனிது வாழ்க. வாழ்கவே!