இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
செல்வம் திரட்டினர் கம்பெனியார்-பின்னர்
சென்னை நகரையும் வாங்கினராம்.
மெல்ல மெல்ல இந்த நாட்டினிலே-அவர்
மிக்க பலத்தினைப் பெற்றனராம்.
இமய மலைமுதல் குமரி முனைவரை
எல்லா வளமும் நிரம்பியதாய்
நமது நன்னாடும் இருந்ததனால் -அவர்
நாட்டின்மேல் ஆசையும் கொண்டனராம்.
அந்தச் சமயத்தில் இந்திய தேசத்தை
அரசர்கள் பற்பலர் ஆண்டுவந்தார்.
அந்த அரசர்கள் தங்களுக் குள்ளேயே
ஆயிரம் சண்டைகள் போட்டுவந்தார
அரசர் இரண்டுபேர் சண்டையிட்டால்-உடன்
ஆனந்தங் கொள்ளுவர் ஆங்கிலேயர்.
ஒருவர்மேல் ஒருவரை ஏவிவிட்டே-நாட்டில்
ஒற்றுமை தன்னைக் குலைத்துவந்தார்.