பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை தமிழன்னைக்குக் கம்பர் சூட்டிய மணிமகுடம்தான் கம்பராமாயணம். கதை பற்றிய கருத்துகள் பல இருப் பினும் கம்பனின் கவிநயத்தை, சொல்லாட்சியை, காவியப் போக்கைக் கண்டு களிப்படையாத உள்ளம் இல்லை என்றே சொல்லலாம். - கம்பராமாயணம் கற்போரின் உள்ளத்திற்கேற்ப, உணர்வுகளுக்கேற்ப வழங்கக் கூடிய ஒரு காவியச் சுரங்கம். - ஆறு காண்டங்கள் உள்ளடங்கிய அந்தச் சுரங்கத்தில் பசுந்தர காண்டம் அனைவராலும் விரும்பிப் போற்றக் கூடிய சிறப்புடையதாகும். எனவேதான் அதனை ஆழ்ந்து அகழ்ந்து அரிய பல கருத்துகளைப் பதினாறு தலைப்பு களில் சுந்தர காண்டச் சுரங்கம்' எனும் இந்த நூலில் தந்துள்ளார் ஆசிரியர் முனைவர் சுந்தர சண்முகனார் அவர்கள். இந்நூலை வெளியிட உதவிய புதுவைக் கம்பன் கழகத்தார்க்கும், அதன் செயலாளர் கம்பவாணர் அ. அருணகிரி அவர்களுக்கும், நூலாசிரியர் முனைவர் சுந்தர சண்முகனார் அவர்களுக்கும், அழகுற அச்சிட்டுத் தந்த ரீகோமதி அச்சகத்தாருக்கும் நன்றி. பதிப்பாளர்