உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 மு கருணாநிதி மைனா என்பது யார்? உங்களுக்கு என்ன உறவு அதிகாரி கேட்டார் அவள் என்... ?' 奶 0440 மனைவி" என்று கூற நினைத்தார் பாகவதர். ஆனால் வார்த்தை வெளிப்படவில்லை அவளை இனி மகளாகவே கருதுவ தாக அவளிடமே வாக்களித்திருக்கிறாரே! 6s அ அதிகாரி விடவில்லை. மைனா உங்கள் மனைவிதானே...?* என்றார் பாகவதர் மறுக்கவில்லை. ஒத்துக்கொண்டு தலையை மட்டும் அசைத்தார். B ... மைனா, தற்கொலை செய்துகொண்டாள் அதிகாரி முடிப்பதற்குள் எனக்கு முன்பே தெரியும் ; அவளுக்கு அதைத் தவிர வேறு வழியில்லை என்னைப் போன்ற பாவிக்கு வாழ்க்கைப் ஊட்டால் ஒரு பெண்ணுக்கு இதுதான் முடிவாக இருக்கமுடியும்... என்று கண்கலங்க, நாக்குழறய பேசினார் பீதாமபரம். அதோடு நிறுத்தவிலலை அவர் அதிகாரியிடம் தன் உள்ளத்தை அப்படியே திறந்து காட்டிவிட விரும்பினார் மைனாவு கும், தனக்கும் நடைபெற்ற திருமணம் இருவரிடையே ஏற்பட்ட ஏமாற்றம் - ஏககம் - பிரிவு இறுதியாக மைனாவை சந்தித்தது - எல்லாவற்றையும் கூறிவிட்டு நடிகர் தேம்பித் தேம்பி அழுதார். - சிங்காரத்தின் இருதயத்திலே நூற்றுக்கணக்கான சம்மட்டி வடிகள் விழுந்து கொண்டே யிருந்தன. மைனா இந்த சோகக் கதையை யத் தன்னிடம் சொன்னபோதே அவளைத் திருத்திக் கணவன் வீட்டுக்கு அனுப்பியிருக்க வேண்டியதல்லவா தன் னுடை டைய கடமை யென்று எண்ணி வேதனைப்பட்டான் ஆனால், அடுத்த கணம் அவனே தன்னைத் தேற்றிக் கொண்டான். மைனா கணவன் வீட்டில் என்ன சுகங் காணப் போகிறாள் 946 அவள் இளமைக் கனவுகள பலித்திட அங்கென்ன மார்க்கமிருக் கிறது...ஆகவே தான் செய்ததும் ஒரு விதத்தில் சரியென்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/122&oldid=1703110" இலிருந்து மீள்விக்கப்பட்டது