உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 'நான் இப்படித்தான் முடுக்குவேன்' என்று முடுக்கினால்,நாதம் எழுவதற்குப் பதிலாக நரம்பே அறுந்துவிடும்! சனநாயகத்தை நாம் மறந்துவிடக்கூடாது! சனநாயகத்தின் மேன்மையை -மாண்பை அனைத் துலகத்தின் தலைவர்கள், பேரறிஞர்கள் எந்த அள வுக்குச் சிறப்பித்துக் கூறியிருக்கிறார்கள் என்பதை யெல்லாம் இங்கே எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். வலது கப் யூனிஸ்டுகளின் சூழ்ச்சி! 0 ஓர் உண்மையை உங்களுக்குச் சொல்ல விரும்பு கிறேன்; இந்திய நாட்டில் இருக்கின்ற (வலது) கம் யூனிஸ்டுகள், மத்திய அரசைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்; மத்திய அரசுக்கு உதவிகர மாக இருப்பதுபோல நடித்துக் கொண்டிருக் கிறார்கள்! - உண்மை என்னவென்றால், முதலில் மத்திய அரசுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தி-மத்திய அரசு திகைக்கின்ற நேரத்தில், 'நான் உதவுகிறேன் உன் பக்கத்தில் இருக்கிறேன் - பயப்படாதே' என்று சொல்வது அவர்கள் திட்டமாக இருக்கிறது: இது, மெல்ல மெல்ல-அவர்களின் கொள்கையுடை யவர்களை மத்திய அரசே அமர்த்தி - எதிர்காலத்தில் இந்தியாவைச் சர்வாதிகார நாடாக்கும் சூழ்ச்சி யாகும். நிதானமுடன் செயலாற்ற வேண்டும் வள்ளித் திருமணத்தில் - முருகன் வினாயகரை அழைத்து, “யானை உருவத்தோடு வந்து வள்ளியைப் பயமுறுத்து என் பான்; யானையாக வந்து வினாயகர் வள்ளியைப் பயமுறுத்து வார்; அந்த நேரத்தில், கிழவனாக இருக்கின்ற முருகனை வள்ளி போய் அணைத்துக் கொள்வாள்; இது, திட்டமிட்டு செய்யப்பட்ட சதி நாடகம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/19&oldid=1695796" இலிருந்து மீள்விக்கப்பட்டது