உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 அந்தப் பெண், 'இப்போதே எனக்கு ஆறு மாதக் கர்ப்பம்' என்று சொல்கிறாள்! உடனே. சொன்னவன்-அந்தப் பெண்ணைப் பார்த்து ‘ஆகா-என்னைக் கேலி செய்கிறாயா?" என்றா கேட்பது? சிரிப்பு அவள் உண்மையிலேயே கர்ப்பம் ஆறு மாதம்/ அவள் எதற்காக ஆலமரத்தடிப் பிள்ளையாரைச் சுற்ற வேண்டும்? நாங்கள் ஏற்கனவே 15 திட்டங்களை நிறைவேற்றி முடித்துவிட்டு, 'இன்னும் ஐந்து திட்டங்களை நிறைவேற்றப் பணம் கொடு' என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம்! இலட்சம் வீடுகள் அரிசனங்களுக்குக் கட்டுவது என்றால், ரூ. 40 கோடி தேவைப்படுகிறது; இந்த அக்டோபருக்குள் 30 000 வீடுகளைக் கட்டி முடிக்க ரூ 12 கோடி ஒதுக்கி - இது வரை ரூ.6 கோடி செலவிட்டிருக்கிறோம்! தமிழ்நாட்டில் இருக்கின்ற மீனவர்களுக்கு இந்த ஆண்டில் ஐயாயிரம் வீடுகள் - ரூ. 2 கோடி செலவில் கட்டு வதற்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது! "இருபது அம்சத் திட்டத்திலே இவைகள் எல்லாம் எங்கே" என்று கேட்கக்கூடாதா? (கைதட்டல்)

  • 14 வங்கிகளை தேசியமயமாக்கியதையே சொல்லிக்

கொண்டிருக்கிறீர்களே - அதற்குப் பிறகு தேசியமயமாக்கப் பட்ட தொழிற்சாலைகளின் பட்டியல் எங்கே- கேட்கக் கூடாதா? ‘அதற்குப் பிறகு நாட்டுடைமைக் கொள்கை என்ன ஆயிற்று' என்று கேட்கக்கூடாதா? தமிழ்நாட்டிலன்றி வேறு எங்கு இருக்கிறது? தமிழ்நாட்டில் மாத்திரம்தான் அரிசனங்கள் இருக் கிறார்களா? இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான அரிசனங் கள் இல்லையா? அவர்களுக்கெல்லாம் நாங்கள் கட்டித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/22&oldid=1695801" இலிருந்து மீள்விக்கப்பட்டது